ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

செல்வந்தர் ஆவதற்கான அறிவியல் | The Science of Getting Rich

 அறிவு + இயல் = அறிவியல்

இயல் உலகு மற்றும் இயற்கை விதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதன் மூலம் கிடைக்கப்பெறும் அறிவு.
(The study of and knowledge about the physical world and natural laws.)

உங்கள் பள்ளிக்கூட வகுப்பில் கணிதப் பாடம் படித்தது நினைவிருக்கிறதா ? ஒரு குறிப்பிட்ட கணித சூத்திரத்தின்(formula) படி நீங்கள் கணக்கிடும்போது உங்களிடம் கேட்கப்பட்ட கணிதவியல் தொடர்பான கேள்விக்கான பதிலை உங்களால் எளிதில் பெற முடிந்தது அல்லவா ?
அதேபோல்தான் செல்வந்தராவதற்கும் ஒரு சூத்திரம் இருக்கிறது. இந்த அறிவுரைகளை நீங்கள் அறிவாக பெற்றுக் கொண்டும் செல்வந்தர் ஆவதற்கான செயல்பாட்டின் விதிகளைப் புரிந்து கொண்டும் செயல்பட்டால் நிச்சயம் நீங்களும் செல்வந்தர் ஆகலாம்.

என்ன செல்வந்தர் ஆவதற்கு ஒரு அறிவியல் இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா ? ஆமாம் இருக்கிறது.

எப்படி ஒரு மனிதன் செல்வந்தர் ஆகிறான் ? அவன் மற்றவர்களைவிட வேறு விதமான செயல்களைச் செய்கிறான் அதனால் தான் அவனால் செல்வந்தனாக முடிகிறது.

பால்கோவா செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு இளம்பெண் அதை செய்ய முயல்கிறாள் சரியாக வரவில்லை ஒரு நாள் தன் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்த போது அவள் சுவையான பால்கோவாவைச் செய்திருந்தாள் இப்போது அப்பெண் தன் தோழியிடம் என்ன கேள்வி கேட்டிருப்பாள் ?
"இதை எப்படிச் செய்தாய் ?" என்றுதானே ?

எல்லோரும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி செயல்களைச் செய்வதில்லை. செல்வந்தர்கள் வேறு விதமான செயல்களைச் செய்கிறார்கள் அதுதான் அதீத செல்வத்தை குவிப்பதற்கான முக்கிய காரணம். இச்செயல்களை தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் செயல்களுக்கு ஏற்ற விளைவுகள் விளைந்து தான் ஆகும், இப்புத்தகத்தின் மூலம் அச்செயல்களை எப்படிச் செய்யலாம் என்கிற அறிவை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.

சரி செல்வந்தர்கள் செய்யும் அந்த விந்தையான செயல்தான் என்ன ? ஒருவேளை செல்வச்செழிப்பான நகரத்துக்கு குடிபெயர்வதாக இருக்கலாமோ ?

இல்லை அப்படி இருந்தால் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் வசிக்கும் அனைவருமே செல்வந்தராகத்தான் இருக்க முடியும். ஆனால் இங்கே நிலைமை அப்படியல்ல செல்வந்தர்கள் வாழும் அதே நகரத்தில் ஏழைகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் மாட மாளிகைகள் நிறைந்திருக்க இன்னொரு புறம் குடிசைகளும் இருக்கத்தானே செய்கிறது.

ஒருவேளை ஒரு குறிப்பிட்ட நூதனமான தொழிலில் ஈடுபடுவதால் செல்வந்தர்கள் அதிகம் செல்வத்தைச் சேர்க்கிறார்களோ ?

இல்லை ஒரே தொழிலில் ஈடுபடும் இருவரில் ஒருவர் வெற்றி பெறுகிறார் மற்றவர் வெற்றி பெற முடிவதில்லை.

இதுமாதிரப் பல காரணங்களை எடுத்து ஆராயலாம் ஆனால் உண்மையில் இவை அனைத்தையும் தாண்டிச் செல்வந்தர்கள் செய்யும் அந்த வேறுபட்ட செயல்பாடுகளே அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்குகிறது, இக்கருத்தை நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் அது இதுதான் நீங்களும் செல்வந்தராக வேண்டுமென்றால் செல்வந்தர்களைப்போல நீங்கள் செய்யும் செயல்கள் வேறு பட்டதாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக